இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு, மருந்து, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக இந்தியாவிற்கு அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய் ராகவன் கொரோனா புதிய அலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், கொரோனாவின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த அலை ஏற்படும் எனத் தெளிவாக தெரியவில்லை. நாம் கொரோனாவின் புதிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்” என கூறியுள்ளார்.