வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மருத்துவமனையில் நூற்றுக்கும் அதிகமானோர் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக உறுதி செய்யப்படும் தொற்றின் எண்ணிக்கையும், உயிர் இழப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் உள்பட 39 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.தொடர்ந்து பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக மருத்துவமனையில் படுக்கை வசதிகளையும் கூடுதலாக மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும் என்பது குடியாத்தம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.