தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
டெல்லி:-
கொரோனா 3வது அலைக் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
![PM Modi Cabinet Meeting: Union Cabinet meeting chaired by Prime Minister Modi .. Special focus on these at the meeting .. - union cabinet meeting scheduled to be held at 11 am](https://d3rk2wqy1pqubb.cloudfront.net/wp-content/uploads/2021/06/union-cabinet-meeting-1.jpg)
இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, டெல்டா பிளஸ் வேறுபாட்டால் கொரோனா 3வது அலை வரும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், இந்த கொரோனா மூன்றாவது அலையின் போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
முன்னதாக, கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று மத்திய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.