அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.24 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.
![Earthquake of 4.6 intensity hits Himachal Pradesh](https://dc-cdn.s3-ap-southeast-1.amazonaws.com/dc-Cover-74a3e7c7jl51rfausgfimp7af6-20160411015433.Medi.jpeg)
இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
இதனிடையே, 2 -3 நாட்களாகவே தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று லடாக்கில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 3.8 ஆக பதிவானது. அதேபோல, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதேபோல் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் சிபா மாகாணத்தில் 80 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![In Pictures: Strong quake off Japan's Fukushima | Gallery News | Al Jazeera](https://www.aljazeera.com/wp-content/uploads/2021/02/2021-02-14T052910Z_577305256_RC22SL9Y257P_RTRMADP_3_JAPAN-QUAKE.jpg?resize=1170%2C780)
பெரிதான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை, எனினும் சிபா பகுதியில் 4 பேர் நிலநடுக்கத்தால் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநில தலைநகர் குவெட்டாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20 பேர் உயிரிழந்தனர்.
![Pakistan earthquake kills 20 in Balochistan province - BBC News](https://ichef.bbci.co.uk/news/976/cpsprodpb/15D72/production/_120885498_071138036-1.jpg)
200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.