தமிழகம்

சென்னையில் இரு நாட்களுக்கு மழை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது. தி.நகர், அடையாறு, கோயம்பேடு, அண்ணாநகர்,பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் திடீரென மழை பெய்தது. மேலும் பெருங்குடி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 22ஆம் தேதி வரை இடி மின்னலுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  புதுவை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி காலமானார்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தின் 26-வது ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி

News Editor

தமிழக பா.ஜ .க தலைவர் அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை…

News Editor

மாணவர்களுக்கு அனுமதியில்லை: தனியார் பள்ளி கூட்டமைப்பு !

News Editor