தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் செல்லத்துரை நேற்று காலமானார். 84 வயதாகும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நடிகர் செல்லத்துரை விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் நடித்து பிரபலமானார். அதனையடுத்து மாரி, நட்பே துணை, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் செல்லத்துரை இழந்துள்ளது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் செல்லத்துரை மறைவுக்கு நடிகர் ஆதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடைசி மூச்சு இருக்கும் வரை நடிச்சிட்டே இருக்கணும்னு என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். நட்பே துணை செட்களில் தினமும், நாங்கள் தாத்தாவுடன் மிகவும் வேடிக்கையாக இருந்தோம்.
சிங்கிள் பசங்க பாடல் படப்பிடிப்பிலிருந்து அவர் இரவு தாமதமாக வெளியேறியபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் சோர்வாக இருந்தோம், ஆனால் அவர் உற்சாகம் நிறைந்தவர். அவர் நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். R.I.P செல்லதுரை தாதா எனக் குறிப்பிட்டுள்ளார்.