தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 80 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 153 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மும்முனை போட்டி நிலவிய வருகிறது. காலையில் இருந்து முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் மயூரா. எஸ்.ஜெயக்குமார் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசன் தற்போது 26,002 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 24, 257 வாக்குகள் பெற்று பெற்றுள்ளார். 21,993 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா.எஸ்.ஜெயக்குமார் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.